பல்லவியும் சரணமும் - IX
இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
'kudigaaranin uLaRaLgaL' வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர், Icarus Prakash மற்றும் சந்திரவதனா ஆகியோர் 2 பேராவது பின்னூட்டம் இட்டபிறகு தான், போட்டியில் ஆஜராகுமாறு, பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் :-)) ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!
1. உண்டால் மயக்கும் கள்ளாவது அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது ...
2. உந்தன் சங்கீத சலங்கை ஒலி இந்த ஏழைக்கு கீதாஞ்சலி ...
3. உந்தன் மீன்விழிகளை காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே ஆணெழில் முகம் வான்மதியென...
4. கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன் காற்றடிக்கும் நேரம் ...
5. நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே? அன்பினாலே ஒன்று சேர்ந்தோம் ...
6. புதுத்தென்றலோ பூக்களில் வசிக்கும், ஆகாய மேகங்கள் நீருற்ற வேண்டும்...
7. காதல் என்பது தேன்கூடு அதை கட்டுவது என்பது பெரும்பாடு ...
8. இளமையின் கனவுகள் கண்ணோரம் துளிர் விடும், கைகள் இடைதனில்...
9. தாங்காது கண்ணா என் தளிர்மேனி நூலினம், தூங்காத கண்கள் ...
10. படுக்கையில் பாம்பு நெளியுது தலையணை நூறு கிழியுது ...
என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
8 மறுமொழிகள்:
4. உன்னை நினச்சேன் பாட்டுப் படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே- அபூர்வ சகோதரர்கள்
மற்றவை யோசிக்கிறேன்!
-நிர்வியா
2. கொஞ்சும் சலங்கைகள் கொண்ட கலைமகள்.. - பாரதிராஜா படம்.(பெயர் யோசித்துக் கொண்டிருக்கிறேன்,)
1 - நாணமோ இன்னும் நாணமோ....
ஆயிரத்தில் ஒருவன்
2 - வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்...
காதல் ஒவியம்
3 - மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு...
அம்பிகாபதி
4 - உன்னை நினச்சேன் பாட்டுப் படிச்சேன் தங்கமே...
அபூர்வ சகோதரர்கள்
5 - மாசிலா உண்மைக் காதலே மாறுமோ...
அலிபாபாவும் 40 திருடர்களும்
7 - உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை...
இரவும் பகலும்
உடனடியாக நினைவில் வந்தவைகளை எழுதியுள்ளேன்.
10. poo malarnthida nadamidum ponmayilE - Tik Tik Tik
சந்திரவதனா,
நீங்கள் கூறிய 7-வது பாடலின் பல்லவி மட்டும் தவறு.
இன்னும் சிறிது நேரம் தருகிறேன். யாராவது 6 to 9 சரணங்களுக்கு பல்லவி கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். பதில்கள் நாளை!
come on, பிரகாஷ், get going :-)
என்றென்றும் அன்புடன்,
பாலா
7 வது பாடலின் பல்லவி
உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இங்கே
உறவுக்குக் காரணம் பெண்களடா...
8.பனிவிழும் மலர்வனம் - நினைவெல்லாம் நித்யா
9.இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் - நல்ல பெண்மணி
6.தோகை இளமயில் - பயணங்கள் முடிவதில்லை
Post a Comment